தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 2688
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் வீரகனூர், கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆகிய இடங்களில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மே 29, 30 ஆகிய நாட்களில் குமரிக்கடல், தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments