மக்கள் கூட்டம் அதிகமுள்ள சாலையில் நடந்து சென்ற பெண்ணை துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிய மர்மநபர்..!

0 5354
மக்கள் கூட்டம் அதிகமுள்ள சாலையில் நடந்து சென்ற பெண்ணை துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிய மர்மநபர்..!

ஹைதராபாத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் நடந்து சென்ற பெண்ணை, கத்தியால் வெட்டிக்கொலை செய்ய முயன்றவனை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

ஹைதராபாத்தின் ஹபீஸ் நகரில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்தவன், தான் வைத்திருந்த நீண்ட கத்தியால் சரமாரியாக வெட்டிய காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

தடுக்க முயன்ற ஒரு சிலரையும் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அவன் தப்பி ஓடி விட்டான். போலீசாரின் விசாரணையில், அப்பெண்ணின் அண்டை வீட்டில் வசிக்கும் அவன் தொந்தரவு அளித்ததாகவும், இதுகுறித்த புகாரில் சிறை சென்றவன் தற்போது வெளிவந்து தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments