424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது பஞ்சாப் அரசு.!

0 2806

பஞ்சாப்பில் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 424 பேருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை அம்மாநில அரசு விலக்கிக்கொண்டுள்ளது.

பக்வந்த்மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற உடன் கடந்த மாதம் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 184 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

முன்னாள் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, கேப்டன் அம்ரிந்தர் சிங்கின் மகன் ரனிந்தர் சிங் மற்றும் அவரது மனைவியும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான பர்தாப் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பையும் பஞ்சாப் அரசு கடந்த மாதம் திரும்ப பெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments