மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் உயர்மின் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

0 2316

ராமநாதபுரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் கேனுடன் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறிய இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

கொடுமலூரைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் - பிரியா தம்பதியருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மகனை பார்க்க வந்த மாயகிருஷ்ணனை விரட்டி விட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாயகிருஷ்ணன் தன்னுடைய மனைவியையும் மகனையும் தன்னுடன் அனுப்பி வைக்க கோரி நேற்று மாலை 4 மணிக்கு கவரங்குளத்திலுள்ள 100 அடி உயர உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறியுள்ளார்.

போலீசார் அவரை மைக் மூலம் அழைத்தும் வர மறுத்துவிட்டார். மனைவி ப்ரியா மற்றும் மகன் ஆகியோர் உடன் வருவதாக உறுதியளித்ததையடுத்து, இறங்கி வந்தார்.

தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனைக்காக 4 மணி நேரமாக துண்டிக்கப்பட்டு இருந்த மின்சாரம் இணைப்பு பின்னர் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments