அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்பட்ட சத்துமாவு கஞ்சியில் பல்லி? 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதி

0 2368

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்பட்ட சத்துமாவு கஞ்சியை உட்கொண்ட 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நெய்குப்பி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள், பெற்றோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில், மயக்கமடைந்த அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, திண்டிவனம் சார் ஆட்சியர் அமீத் மருத்துவமனைக்கு நேரில் சென்று அனைவரையும் சந்தித்ததோடு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments