மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் மேலும் ஒரு மாடல் அழகி தற்கொலை

0 2708

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2 நாட்களுக்கு முன் மாடல் அழகி ஒருவர் தற்கொலை செய்த நிலையில், அவரது தோழியான மஞ்சுஷா நியோகி என்ற மற்றொரு மாடல் அழகியும் தற்கொலை செய்துகொண்டார்.

கொல்கத்தாவின் பட்டூலி பகுதியை சேர்ந்த மஞ்சுஷா, தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தெரிவித்த அவரது தாயார், தனது தோழியான பிதிஷா டி மஜும்தார் இருநாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மஞ்சுஷா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறினார்.

கொல்கத்தாவில் கடந்த 15ஆம் தேதி தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே தற்கொலை செய்த நிலையில் 12 நாட்களுக்குள் 3 பிரபலங்கள் உயிரிழந்ததுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments