நெடுஞ்சாலையில் இரு லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய கார்-4 வயது சிறுவன் பலி

0 4853

கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கார் ஒன்று எதிரெதிரே வந்த இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய விபத்தில், 4 வயது சிறுவன் உயிரிழந்தார்.

பிரஸ்காலணி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் தனது பேரன்கள் மூவருடன் கோடை விடுமுறையை கொண்டாட மலம்புழா சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மதுக்கரை நெடுஞ்சாலையில் சென்ற போது காரின் பின்னால் வேகமாக வந்த லாரி, கார் மீது மோதி இழுத்துச் சென்றது. இதில் திசை திரும்பிய கார் மீது எதிர்திசையில் வந்த டிப்பர் லாரியும் மோதியதில், இரண்டு லாரிகளுக்கும் இடையில் சிக்கி கார் உருக்குலைந்தது.

காரில் பயணித்த 4 வயது சிறுவன் யுவன் கிரிசின் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த செல்வராஜும் 2 சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments