தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

0 3362

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் மே 31 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மே 29, 30 ஆகிய நாட்களில் குமரிக்கடல், தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments