டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் வைத்தும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..!

0 2302
டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் வைத்தும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்காக அனுசரிக்கப்பட்ட நினைவேந்தலில் மக்கள் கண்ணீருடன் பங்கேற்றனர்.

அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியைகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சிலுவைகள் அருகே மலர்களை வைத்தும், மெழுகு வர்த்தி ஏற்றியும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்க நடிகையும், பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவியுமான மேகன் மார்க்கல் இறந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments