மகாராஷ்டிராவில் சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து.. ஓட்டுநர் உட்பட 15 பேர் காயம்.!

0 2330

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் ஓட்டுநர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

புசாவல் என்னுமிடத்தில் இருந்து பால்கர் நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒரு வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் 25 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்த காவல்துறையினரும், பிற வாகனங்களில் வந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments