திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பெருமாளை வழிபட 5 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் 20 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த பக்தர்கள்.!

0 3707

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பெருமாளை வழிபட 5 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் 20 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் காத்திருந்தனர்.

கோடை விடுமுறை காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் 64 அறைகளும் நிரம்பி வழிந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் காத்திருந்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால் தற்போது ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. வரிசையில் காத்திருப்போருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில்  உணவு, குடிநீர், டீ, காபி மற்றும் பால் வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments