ராமநாதபுரம் அடச்சேரி கடலில் இருந்து கரை ஒதுங்கிய ராட்சத இரும்பு உருளை

0 6039

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அடச்சேரி கடலில் இருந்து சுமார் 250 கிலோ எடை கொண்ட ராட்சத இரும்பு உருளை கரை ஒதுங்கியது.இதனை கண்டு கரையில் இருந்த மீனவர்கள் மெரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் அங்கு சென்று அந்த உருளையை பார்வையிட்ட மெரைன் போலீசார் அது துறைமுகத்தில் கப்பல்கள் செல்ல கூடிய பகுதியில் வழிகாட்ட போடப்படும் மிதவையாக இருக்கலாம் என்றும், கடல் சற்று சீற்றம் அடைந்திருப்பதன் காரணமாக கயிறு அறுந்து, அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் அதனை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments