கன்னியாகுமரியில் தன்னை காக்க வைத்த நபரை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கறிஞர்.!

0 3091

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தன்னை காக்க வைத்த நபரை வழக்கறிஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியதாக ஒரு காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த வார சனிக்கிழமை நெல்சன் என்ற அந்த வழக்கறிஞரை சந்திக்க தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிராஜ் மற்றொரு வழக்கறிஞருடன் வந்துள்ளார்.

அந்தோனிராஜ் தாமதமாக வந்ததாக கூறி நெல்சன் கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் நெல்சன் கத்தியை காட்டி மிரட்டி அந்தோணிராஜை வெளியே போகும்படி விரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இருவரும் போலீசில் மாறி மாறி புகாரளித்திருந்த நிலையில், வழக்கறிஞர் நெல்சன் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments