ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 11 பேர் கைது.!

0 2789

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்றிரவு சித்தூர் - வேலூர் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக வந்த ஆம்புலன்ஸை போலீசார் சோதனையிட்ட போது அதனுள்ளே செம்மரக்கட்டைகள் இருந்துள்ளன. ஆம்புலன்ஸில் இருந்து 4 பேர் தப்பி ஓடிய நிலையில் எஞ்சிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் சித்தூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட 36 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இரு வேறு சம்பவங்களில் மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments