பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், 5 கோரிக்கைகளை முன்வைத்த முதலமைச்சர்

0 4273

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 5 கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் முன் வைத்துள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற பின்னர் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது என்றார்.

சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசோடு இணைந்து பணியாற்ற தமிழக அரசு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. தொகை நிலுவை 14006 கோடி ரூபாயை  வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments