காவல்நிலையம் அருகே பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை; முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து கொலை கும்பல் வெறிச்செயல்

0 3900

புதுச்சேரியில் காவல்நிலையம் அருகே வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருவடிக்குப்பத்தை சேர்ந்த ரவுடி சரத் என்கிற பொடிமாஸ், அரியாங்குப்பம் காவல்நிலையம் பின்புறம் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

அதிகாலையில் வீடு புகுந்த மர்ம கும்பல், வீட்டிலிருந்த சரத்தின் மாமாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அமரவைத்துவிட்டு, சரத் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்று கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பகுதியில் வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இதில் தொடர்புடைய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக ரவுடி சரத் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments