டெக்ஸாஸ் பகுதியில் பள்ளியருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மாணவன் கைது

0 2640
டெக்ஸாஸ் பகுதியில் பள்ளியருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மாணவன் கைது

அமெரிக்காவில் டெக்ஸாஸ் பகுதியில் பள்ளியில் 19 மாணவர்கள் உள்பட 23 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர் .

ஆயுதங்களுடன் ரிச்சர்ட்சன் உயர் நிலைப் பள்ளிக்கு அருகில் ஒரு மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கையில் துப்பாக்கியுடன் ஒரு மாணவன் பள்ளிக்கு அருகில் நடமாடுவதாக போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.

உடனடியாக அப்பகுதியில் இருந்த அனைத்துப் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வேகமாக செயலில் இறங்கி அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். அவர் வாகனத்தில் ஏகே 47 ரக கைத்துப்பாக்கி மற்றும் ரைபிள் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆயுதத்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments