கொடைக்கானலில் 2-வது நாளாக நடைபெறும் மலர்க்கண்காட்சி: ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.!

0 1598

கொடைக்கானலில் 2-வது நாள் மலர்க்கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

ப்ரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் மலர்க்கண்காட்சியில் பூத்து குலுங்கும் பல்வேறு வகையான மலர்களுடன் சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

தோட்டக்கலை சார்பில் பல்வேறு வகையான மலைக்காய்கறிகள், பழ வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தர்பூசணி பழத்தில் வடிவமைக்கப்பட்ட நடராஜர், ஆடல் மகளிர் சிற்பங்கள் அனைவரையும் கவர்ந்தது. பாடல், மேஜிக் ஷோ, பரதநாட்டியம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments