அமெரிக்கா துவக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழப்பு.!

0 1731

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளியில் 18 வயது இளைஞனால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு நிகழ்வில், 19 சிறுவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.

டெக்சாசின் ராப் துவக்க பள்ளியில், கைத்துப்பாக்கி மற்றும் ரைபிளுடன் நுழைந்த சல்வடொர் ராமொஸ் என்ற இளைஞர் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில், 19 சிறுவர்கள், பள்ளி ஆசிரியர்கள் இருவர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர்.

போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி சுட்டுக்கொல்லப்பட்டான்.

துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்கு முன், அந்த இளைஞர் துப்பாக்கியுடன் கூடிய புகைப்படங்களை, ஒரு பெண்ணுடன் டேக் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளான்.

மேலும், தனது பாட்டியையும் கொலையாளி சுட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments