நான் முதல்வன் திட்டத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை - முதலமைச்சர்

0 3007

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ராணிமேரி கல்லூரியில் தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்பட்ட  நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திராவிட மாடல் அரசு என்றும் முன்னோடியாக திகழும் என்றார்.

பின்னர் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சேர்க்கைச் சான்றிதழ்களையும், பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments