திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசனம் செய்ய ரூ.200 கோடி செலவில் HCL நிறுவனத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் சேகர்பாபு.!

0 3464

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய 200 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விரைவு தரிசனம் செய்வதற்கான பணிகள் HCL நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என கூறினார்.

முன்னதாக, மேலன்பிலில் நடைபெற்ற அருள்மிகு சுந்தராஜபெருமாள் கோயிலின் தேர் வெள்ளோட்ட நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments