தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது.. 62 சவரன் தங்க நகைகள் மீட்பு..!

0 2921
தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது.. 62 சவரன் தங்க நகைகள் மீட்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவுடையாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது நிஜாம் என்பவர் கடந்த மாதம் 24ம் தேதி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 62 சவரன் தங்க நகைகள் மற்றும் 188 கிராம் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டன. கொலைக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments