திகார் சிறையில் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறையினர் பல மணி நேரம் விசாரணை

0 2114

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

சிபிஐயால் வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவும் அதற்கு முன்பாக அவருடைய அலுவலகத்தில் செயல் அதிகாரியாக இருந்த ஆனந்த சுப்பிரமணியத்தையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments