திருத்தணியில் கோவில் ஊழியரை பக்தர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சி.. போலீசார் விசாரணை!

0 2821

திருத்தணி முருகன் கோவிலில், சிறப்பு வழியில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படாததால் ஏற்பட்ட தகராறில், கோவில் ஊழியரை பக்தர் ஒருவர் சரமாரியாக தாக்கிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இக்கோவிலில் 150 ரூபாய் கட்டண வரிசையில் உள்ளூர் பக்தர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவது வழக்கம்.

செவ்வாய் கிழமையான இன்று பக்தர்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என்பதால், உள்ளூர் பக்தர்கள் சிறப்பு வழியில் இலவசமாக தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கம் போல இலவசமாக தரிசிக்க வந்த லோகு என்ற உள்ளூர் பக்தரை கோவில் ஊழியர் புருஷோத்தமன் உள்ளே அனுமதிக்க மறுத்த நிலையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments