மருத்துவ மாணவி விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை..!

0 6171
மருத்துவ மாணவி விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை..!

கேரள ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயாவிற்கு, 2020ஆம் திருமணம் நடைபெற்ற நிலையில், வரதட்சனையாக கொடுக்கப்பட்ட காரின் மதிப்பு குறைவு எனக்கூறி விஸ்மயாவை கிரண் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் விஸ்மயா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, கிரண் குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இதை தொடர்ந்து, அவருக்கு சிறை தண்டனையுடன், 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments