பயணச்சீட்டுக்கு சரியான சில்லறை கொடுக்காததால் பயணியை சரமாரியாகத் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்..!

0 7008
பயணச்சீட்டுக்கு சரியான சில்லறை கொடுக்காததால் பயணியை சரமாரியாகத் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்..!

கோவை அருகே சரியான சில்லறை தரவில்லை எனக் கூறி, பயணி ஒருவரை தனியார் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் என்.எம்.எஸ்.எஸ் .ஆர்.டி என்ற தனியார் பேருந்தில் அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கிச் சென்றுள்ளார்.

பயணச்சீட்டு வாங்கும்போது ரங்கசாமியிடம் சரியான சில்லறை இல்லாத நிலையில், நடத்துநருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் முற்றி, நடுவழியில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், நடத்துநருடன் சேர்ந்து ரங்கசாமியைத் தாக்கியுள்ளார். இதனை அவ்வழியாகச் சென்ற ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments