மருதமலை முருகன் கோவிலில் "மல்டி-லெவல் கார் பார்கிங்" வசதி அமைக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு

0 3584
மருதமலை முருகன் கோவிலில் "மல்டி-லெவல் கார் பார்கிங்" வசதி அமைக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு

மருதமலை முருகன் கோவிலில் படிக்கட்டு முதல் உச்சி வரை செல்ல மின்தூக்கி அமைக்கும் பணிகள் ஒன்றரை மாதத்தில் தொடங்கும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் கோவிலில் பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, மருதமலை அடிவாரத்தில் மல்டி-லெவல் கார்-பார்கிங் அமைக்கப்படும் என்றார்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 23 கோயில்களில் திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments