இரவில் சுற்றித் திரியும் பாகுபலியை துணிச்சலுடன் விரட்டிய செல்லப்பிராணி.!

0 4466

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குடியிருப்பு பகுதிகளில் இரவு முழுவதும்  சுற்றித் திரியும் பிரமாண்ட பாகுபலி யானையை அச்சுறுத்தி விரட்ட முயன்ற குட்டி நாயின்  துணிச்சல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நேற்றிரவு சமயபுரம் பகுதியில் சாலையை கடந்து ஊருக்குள் நுழைந்த  யானையை அங்கிருந்த சிறு நாயொன்று குரைத்தபடி விரட்டி சென்று தனது எதிர்பை காட்டியது.

யானையின் வருகையை ஊர் மக்களுக்கு தெரிவிக்குபடி தொடர்ச்சியாக குரைத்து யானையின் பின்னே சென்றது. ஒருகட்டத்தில் கோபமடைந்த யானை பிளிறி அதனை விரட்ட முயன்றாலும்  பயப்படாத நாய் கடைசி வரை யானையை துரத்துவதிலேயே குறியாக இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments