இலங்கை துறைமுகம் சென்றடைந்தது தமிழ்நாடு அரசின் நிவாரண பொருட்கள்.!

0 2628

தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் இலங்கை சென்றடைந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதியன்று, 9 ஆயிரம் டன் அரிசி, இருநூறு டன் ஆவின் பால் பவுடர், 24 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் உதவிப்பொருட்களுடன் சென்ற கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. இதனை அடுத்து, மனிதாபிமான முறையில் உதவிய தமிழக முதலமைச்சருக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ரணில் விக்கிரமசிங்கே ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments