மே 24ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை... கல்லணையில் முழு வீச்சில் நடைபெறும் பராமரிப்புப் பணி..!

0 2869

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணை நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லணையில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

கடைமடை பகுதி வரை தண்ணீர் எளிதாக வெளியேற வசதியாக கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில் 10 கோடி ரூபாய் செலவில் மதகுகள் சீரமைத்தல், கால்வாய் பாலம் சீரமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொள்ளிடம் ஆற்றில் 50 ஆண்டுகளுக்கு பிறகு இரும்பிலான 30 நீர் ஒழுங்கிகள் மாற்றப்படும் நிலையில் அவை எளிதாக திறக்க மின்மோட்டார்கள் சரி செய்யப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments