சட்டவிரோதமாக நடந்த DJ பார்ட்டியில் இளைஞர் பலி... வி.ஆர் மாலில் உள்ள Monkey பாருக்கு சீல்

0 4183

சென்னை வி.ஆர். மாலில் உரிய அனுமதியின்றி நடந்த இசை நிகழ்ச்சியில் மது மற்றும் போதை மருந்துகளை எடுத்துக் கொண்டதாக கூறப்படும் மென்பொருள் நிறுவன ஊழியர் உயிரிழந்த நிலையில், மதுக்கூட மேலாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரவீன் என்பவர் டி.ஜே நிகழ்ச்சியில் பங்கேற்றதை அடுத்து, மயங்கிய நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில் நடந்த விசாரணையில், அவர் அதிக மது மற்றும் போதைப் பொருளை உட்கொண்டதால் மயங்கியது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சட்டவிரோத கேளிக்கை நிகழ்ச்சி நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த போலீசார், மாலில் இருந்த மங்கி பார் என்ற மதுக்கூடத்திற்கு சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments