கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

0 2533

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் தேதி அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர்.

இதில் இருவர் உயிருடனும் மூவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் ஆறாவது நபரை மீட்கும் பணி கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆறாவது நபர் சிக்கியிருப்பதாக கருதப்படும் லாரி கேபினுக்கு மேல் பாறைகள் கிடப்பதால் மீட்புப்பணியில் சிக்கல் எழுந்துள்ளதாகவும், விரைவில் மீட்புப்பணி துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments