10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியினருக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ்..

0 14531
மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக நடிகர் தனுசும், அவரது தந்தை கஸ்தூரிராஜாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக நடிகர் தனுசும், அவரது தந்தை  கஸ்தூரிராஜாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தனுஷை உரிமை கோரி கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் என குற்றச்சாட்டுகளைக் கூறி  நடிகர் தனுசுக்கும், கஸ்தூரிராஜாவுக்கும் தம்பதியினர் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்கறிஞர் காஜாமொய்தீன் கிஸ்தி மூலம் கஸ்தூரிராஜாவும், தனுசும் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அதில்  தங்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் மன்னிப்புக் கோர விட்டால் 10 கோடி ரூபாய்  மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments