உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் அருகே பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ.!

0 1596

உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் அருகே பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ, கதிர்வீச்சு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

அணுமின் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் கதிர்வீச்சின் அளவு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இல்லை என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்ததாக ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

காட்டுத்தீயானது காற்றில் கதிர்வீச்சு அளவை மிகச்சிறிய அளவிலேயே அதிகரிக்கும் என்பதை இதற்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் என சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments