போரின் போது முதியவரை கொலை செய்த ரஷ்ய வீரர்... உக்ரைன் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்..

0 3866
உக்ரைன் போரில் முதியவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ரஷ்ய வீரர், கீவ் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.

உக்ரைன் போரில் முதியவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ரஷ்ய வீரர், கீவ் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.

வாடிம் ஷிஷிமரின் என்ற 21 வயதான ரஷ்ய வீரர், வடகிழக்கு உக்ரைனிய கிராமமான சுபாகிவ்காவில் (Chupakhivka) போர் புரிந்த போது 62 வயதான முதியவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் கீவ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்தவரின் மனைவியிடம் மன்னிப்புக் கோரிய ரஷ்ய வீரர், தான் செய்த அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக் கொள்வதாக கூறினார்.

படையெடுப்பின் போது மக்களுக்கு எதிரான செயல்களில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டதாக உக்ரைன் குற்றஞ்சாட்டிய நிலையில், அந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments