எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து சிதறியதால் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதம்

0 3274

சென்னை சோழிங்கநல்லூரில் சார்ஜில் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து சிதறியதில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈஸ்வரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் தனது எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை கழற்றி சார்ஜில் போட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் திடீரென அந்த பேட்டரி வெடித்து சிதறியதில் வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனைக் கண்ட ஈஸ்வரன் குடும்பத்துடன் உடனடியாக வீட்டை  விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments