பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் வெட்டிக் கொலை...போலீசார் விசாரணை.!

0 3521

சென்னை செனாய் நகரில், பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்து ஆறுமுகத்தை வழிமறித்த கும்பல், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

ரத்த வெள்ளத்தில் துடித்த ஆறுமுகம், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில், ஆறுமுகம் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments