தடையில்லா சான்று வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்... நெடுஞ்சாலைத்துறை பெண் ஆய்வாளர் கைது!

0 3182

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தடையில்லா சான்று வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத் துறை பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

பெட்டட்டி சுங்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவர், புதிய வீட்டுக்குக் கழிவுநீர் கால்வாய் அமைக்க தடையில்லா சான்று கோரி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அணுகியுள்ளார்.

நெடுஞ்சாலைப் பணிகள் ஆய்வாளர் நித்யா எவாலின் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், ரசாயனம் தடவிய ரூபாய்த் தாள்களை பெறும்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments