மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள்... மின்னல் தாக்கி பரிதாப பலி.!

0 4060

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில், மேய்ச்சலுக்காக அழைத்து செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன.

தும்குர்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், ராஜனா உள்ளிட்டோர் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்காக மல்லாபுரம் அருகிலிருக்கும் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ததால் அவர்கள் ஆடுகளை அங்கிருந்த மரத்தடிக்கு ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் 114 செம்மறி ஆடுகள், 39 ஆடுகள், ஒரு பசு மாடு உள்ளிட்டவை பரிதாபமாக உயிரிழந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments