வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவைத் திரும்ப பெற்றார் நடிகை ஜாக்குலின்.!

0 2608

பணமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

சுகேஷ் சந்திரசேகர் என்பவன் தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் ஏமாற்றிப் பெற்றது தொடர்பாக ஜாக்குலின் மீதும் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில் மே 17 முதல் 22 வரை அபுதாபியில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்கச் செல்ல அனுமதிக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் ஜாக்குலின் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சி ஜூன் மாதத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறித் தனது மனுவை ஜாக்குலின் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments