திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல்.!

0 2803

திருச்சி மாவட்ட தொழில் மையத்தில், கணக்கில் வராத 3 லட்ச ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதன் மேலாளர் ரவீந்திரனுக்கு சொந்தமான வாங்கி லாக்கரில் இருந்து 110 சவரன் நகைகளை கைப்பற்றினர்.

தொழில் கடன்கள் மற்றும் முதலீட்டு கடன்கள் கேட்டு வருவோரிடம் 12 சதவீதம் வரை கமிஷன் பெறப்படுவதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து திங்கட்கிழமை அங்கு சோதனையிட்ட போலீசார் 3 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மேலாளர் ரவீந்திரனின் வீட்டில் இருந்து 6 லட்ச ரூபாய் ரொக்கம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நில ஆவணங்கள், 50 சவரன் நகை மற்றும் 50 லட்ச ரூபாய் வங்கி முதலீட்டு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இன்று அவரது வங்கி லாக்கரில் இருந்த 110 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments