பெங்களூரில் கனமழை - தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு..!

0 3275
பெங்களூரில் கனமழை - தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு..!

பெங்களூரில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடியது. சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சாம்ராஜ்நகர், குடகு, தார்வார், பெலகாவி, பீதர், கலபுரகி, யாதகிரியிலும் நேற்று மழை பெய்தது.

இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இன்று முதல் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments