குருப் 2, 2ஏ தேர்வு திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி தலைவர்.!

0 2499

குரூப்-1 தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதியிலும், குரூப்-2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியிலும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், 5 ஆயிரத்து 529 பணியிடங்களுக்கான குருப் 2, 2ஏ தேர்வு திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் காலை 9 மணிக்குப் பின் வருபவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஹால் டிக்கெட் உடன் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments