தேர்வில் தோல்வி பயத்தால் கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

0 6330

கடலூர் மாவட்டம் பெண்கள் கல்லூரி கழிவறையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செம்மண்டலம் பகுதியில் உள்ள கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரிக்கு காலை வழக்கம் போல் வந்த மாணவிகள், கழிவறையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முதலாமாண்டு பி.காம் படிக்கும் அந்த மாணவியின் புத்தகப் பையில் இருந்த கடிதத்தில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தால் தற்கொலை செய்வதாக அவர் எழுதி வைத்துள்ளார்.

கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று மாலை வகுப்புகள் முடிந்ததும் கழிவறைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments