புதுக்கோட்டையில் குடும்ப பிரச்சனை காரணமாக தான் பெற்ற 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்த தாய்.!

0 3299

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் தான் பெற்ற 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கருப்பர் கோவில் பட்டியைச் சேர்ந்த பொன்னாடைக்கன்-பஞ்சவர்ணம் தம்பதியினருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனவிரக்தியடைந்த பஞ்சவர்ணம் குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments