நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து.. 85 பயணிகள் காயம் - ஓட்டுநர் உயிரிழப்பு..!

0 3794
நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து.. 85 பயணிகள் காயம் - ஓட்டுநர் உயிரிழப்பு..!

ஸ்பெயின் நாட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டு எதிரே வந்த புறநகர் பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ரயில் எஞ்ஜின் டிரைவர் உயிரிழந்தார்.

பார்சிலோனாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள Sant Boi de Llobregat நகரில் உள்ள ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது தண்டவாளத்தில் இருந்து விலகிய சரக்கு ரயில் பலமாக மோதியது.

இந்த விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 85 பயணிகள் காயமடைந்தனர். மீட்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments