ஈராக்கை 8-வது முறையாக தாக்கிய புழுதிப் புயல்.. செந்நிறப் போர்வையால் மூடியது போல் காட்சி..!

0 2922
ஈராக்கை 8-வது முறையாக தாக்கிய புழுதிப் புயல்.. செந்நிறப் போர்வையால் மூடியது போல் காட்சி..!

ஈராக்கில் கடந்த சில நாட்களில் 8வது முறையாக வீசும் புழுதிப் புயலால் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து வீசி வரும் புழுதிப் புயலால் பாக்தாத் உள்பட பல்வேறு நகரங்கள் செந்நிற போர்வை கொண்டு போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.

நூற்றுக்கணக்கான மக்கள் சுவாசக் கோளாறு, சருமப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார நலன் கருதி பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பாக்தாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments