அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள் கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருகிறது - அதிகாரி கலிதா
அருணாச்சல பிரதேச எல்லை அருகே உள் கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருவதாக இந்திய ராணுவத்தின் கிழக்கு கமாண்ட் பொதுப்பிரிவு அதிகாரி RP Kalita தெரிவித்துள்ளார்.
எல்லைக் கட்டுப்பாடு பகுதிக்கு அப்பால் சாலை வசதி, ரயில் மற்றும் வான்வழி போக்குவரத்து தொடர்பு, மொபைல் சேவை என சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் வசதிகளை ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சீனாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்திய ராணுவத்தின் உள்கட்டமைப்பு வசதிகளும், திறன்களும் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் லெப்டினென்ட் ஜெனரல் ஆர்.பி.கலிதா தெரிவித்தார்.
Comments