ஈராக்கில் பல்வேறு மாகாணங்களில் கடுமையான புழுதிப்புயல் வீசியதில் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த வானம்

0 3204
ஈராக்கில் பல்வேறு மாகாணங்களில் கடுமையான புழுதிப்புயல் வீசியதில் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த வானம்

ஈராக்கில் பல்வேறு மாகாணங்களில் கடுமையான புழுதிப்புயல் வீசியதில் அங்கு வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.

நஜாஃப், கிர்குக், பாபில், வசிட், அன்பர், கார்பாலா உள்ளிட்ட மாகாணங்களில் எதிர் வருபவர்கள் யாரென்றே தெரியாத அளவிற்கு புழுதிப்புயல் வீசியது.

அம்மாகாணங்களில் சுகாதார துறை நீங்கலாக அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதாக ஈராக் அரசு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக பாக்தாத் மற்றும் நஜாஃப் சர்வதேச விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments