வீட்டுமனை பட்டா வழங்க லஞ்சம்... கையும், களவுமாக பிடிபட்ட நில அளவையர்.!

0 15450

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வீட்டுமனை பட்டா வழங்க லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது செய்யப்பட்டார்.

சக்கராபுரத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் வீட்டு மனை பட்டா கோரி விண்ணப்பத்திருந்த நிலையில், அவரது நிலத்தை அளவிட்டு சென்ற சர்வேயர் அன்புமணி, பட்டா வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்த ஜோசஃப், அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கேவிகே தியேட்டர் பகுதியில், அன்புமணியிடம் பணத்தை கொடுத்தபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments